Showing posts with label Facebook Fizz. Show all posts
Showing posts with label Facebook Fizz. Show all posts

Thursday, 29 September 2011

மூஞ்சிப் புத்தக நொறுக்'ஸ்

மூஞ்சிப் புத்தகத்தில் நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட சில சிந்தனைகளை இங்கே பதிவிலும் உங்களோடு...


  • வீட்டுக்கு ஒரு மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போம்.
  • சக ஆண் அலுவலருக்கு திருமணம் நிச்சயமானால், பெண்ணின் புகைப்படத்தை கேட்டு வாங்கிப் பார்க்கும் சக பெண் அலுவலர்கள், தங்களுக்கு திருமணம் நிச்சயமாகும்போது (சக ஆண் அலுவலர்கள்) மாப்பிள்ளையின் புகைப்படத்தை கேட்டாலும் காட்டுவதேயில்லை.
  • ஆறாம்நாள் கடவுள் மண்ணால் மனிதனைப் படைத்தார்.                                                                                        ஏழாம்நாள் மனிதன் கல்லால் கடவுளையும் அவ்வண்ணமே.
  • பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கிய பயணத்தில் கரைந்து கொண்டிருக்கிறது இந்த இரவு.  கடந்த கால நிகழ்வுகள் குறித்த எண்ண அலைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கின்றன யதார்த்தக் கிளிஞ்சல்கள்.
  • கிராமங்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். பாளம்பாளமாய் வெடித்துக் கிடக்கும் விவசாய பூமிக்காகவும் வீட்டுமனைகளாகும் விளைநிலங்களுக்காகவும் வருத்தப்படும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசம் சிலிர்ப்பூட்டுகிறது.
  • யாரையோ பார்த்து நீ பிரம்மிக்கும் அதே விநாடியில், உன்னைப் பார்த்தும் யாரோ பிரம்மிக்கிறார்கள்!
  • "உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரண்ட்?" என்ற கேள்விக்கு "ஒருவரும் இல்லை" என்ற பொய்யையே எப்போதும் சொல்லத்தூண்டுகிறது சமூகத்தின் மாறுகண்.
  • எத்தனை அழுத்தி எழுதினாலும், காகிதத்திற்கு புரியவில்லை காதலின் வலி.
  • எல்லாத் தோல்வியிலும் ஏனிப்படி, ஏனிப்படி என்று உன்னையே நீ கேள். அதுதான் உன் வெற்றியின் ஏணிப்படி!
  • இந்தப் பூனை அழகிகளுக்கு ஆப்பிள் கொடுக்கும் சாத்தான் கடவுளாகட்டும்... # Catwalk babies in Fashion show.
  • என் கால்களுக்கு எதிரான திசையில் இருக்கிறது இலக்கு... ஆனாலும் தேடலோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது பயணம்...
  • எல்லோருடைய இறந்தகாலத்திலும் ஒரு நஷ்டக் கணக்கு இருக்கத்தான் செய்கிறது. மீள்கிறவர்கள் வாழ்கிறார்கள். மீளாதவர்கள் வாழ்க்கையை தள்ளுகிறார்கள்.
 நன்றி: மூஞ்சிப்புத்தகம் வார்த்தைக்காக சகோ.ம.தி.சுதா -க்கு.