Thursday 22 December, 2011

பாழும் தூக்கம் வந்தாலென்ன...




ன் நினைவுகளில் 
தூக்கம் தொலைத்துத் 
தவிக்கிறேன் நான்.

அயர்ந்த தூக்கத்தில் 
திடீரென விழித்தாலும்
எனக்கான கவிதையைப் 
புனைகிறாய் நீ!

பாழும் தூக்கம் 
எனக்கும் வந்தாலென்ன...

நானும் உனக்கொரு
கவிதை நெய்யலாமே!

Wednesday 21 December, 2011

புன்னகைப் பொழுது




லைபேசியின் தொடுதிரையில்
உன் பெயரை ஸ்பரிசிக்கும்
எல்லாப்பொழுதுகளிலும்
உயிருக்குள் 
அரும்புகள் கூட்டி மலர்கிறது 
ஒரு புன்னகை.