ஒரு அழகான கிராமம். (எப்படிப்பட்ட அழகுன்னு தெரிஞ்சுக்க இங்க கிளிக்-குங்களேன்) அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்ஒரு அழகிய பெண்ணை யாரும் பார்த்ததும் இல்லை... கேட்டதும் இல்லை. அந்தப்பெண் பக்கத்துகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது. (ஏன் இந்த எதிர்ப்பு? தெரிஞ்சுக்க இங்ககிளிக்-குங்களேன்). இதனால்வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒடதீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.
உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.அதன் பிறகு அவர்கள்அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர். அதைப்பார்த்த காதல்ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப்பட்ட ஊர்மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான பொருட்களைவாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப்பெண் எதிரிலேயேஉயிர் துறந்தான். உடனே அந்தப்பெண்ணும்மனநிலை பாதிக்கப்பட்டாள்.ரொம்ப நாட்களுக்குப்பிறகு நினைவு திரும்பிய அந்தப்பெண் தனது குடும்பத்தினருடன்வசித்து வந்தாள்.
திடீரென்று ஒருநாள்.. .
அப்பெண்ணின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும்இரத்தக்கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது. இல்லாவிட்டால்மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்தநாள் அதே தேவதை அந்தப் பெண்ணின் தந்தையிடமும் கனவில்எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தநாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப்பற்றிக் கூறினாள். அதன்பிறகே, அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய்அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்ணும்அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்தநாள் கனவில் வந்து கறை சரியாகப்போகவில்லை என்றுஎச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும்கறை போகவில்லை.
அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப்போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது...,
"லூசாடி நீ!, ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்."
-0-0-0-0-0-0- இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டுஇருக்கேன்.
அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்றுதான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும்.நாட்டின்முதல்ஜனாதிபதிடாக்டர்ராஜேந்திரபிரசாத், முதல்பிரதமராகவிளங்கியஜவகர்லால்நேருவுக்குசெப்டம்பர், 1952-இல்எழுதியகடிதத்தில், 'சிலதருணங்களில்ஜனாதிபதிசுயேச்சையாகமுடிவெடுக்கவாய்ப்புஉண்டு’ என்றுகுறிப்பிட்டார். இந்தக்குறிப்பைநேருவால்ரசிக்கஇயலவில்லை.
ஆனாலும், தன்கருத்துவேற்றுமையைவெளிப்படுத்தநேருதயங்கினார். காரணம், இருவரும்காந்தியப்படையின்தளகர்த்தர்களாகஇருந்தவர்கள். ராஜன்பாபு, மூன்றுமுறைகாந்தியால்காங்கிரஸ்தலைவராக்கப்பட்டவர்.
சட்டப்படிப்பில்டாக்டர்பட்டம்பெற்றபிரசாத்,
அரசமைப்புச்சட்டத்துக்குவடிவம்வழங்கியஅரசியல்நிர்ணயசபையின்தலைமைநாற்காலியைஅலங்கரித்தவர்.
ராஜன்பாபுவுடன்மோதலைத்தவிர்க்கவிரும்பியநேரு,
அவர்எழுதியகடிதத்தின்நகலைஅரசமைப்புச்சட்டத்தைஉருவாக்கியவர்களில்ஒருவரானஅல்லாடிகிருஷ்ணசாமிஐயருக்கும், அன்றையஅட்டர்னிஜெனரலாகப்பதவிவகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்புமுறையைமுன்மாதிரியாகக்கொண்டுஇருப்பதால், குடியரசுத்தலைவர்அமைச்சரவைக்குக்கட்டுப்பட்டேநடக்கவேண்டியர்ஆவார்’
என்றுஇருவரும்தங்கள்கருத்தைவெளிப்படுத்தினர். ராஜன்பாபுவுக்குஇதுமனநிறைவைத்தராவிடினும்நாட்டுநலனைமுன்னிறுத்திப்பிரச்னைக்குமுற்றுப்புள்ளிவைத்தார். ஆயினும், தான்ஓர்அலங்காரபொம்மைஎன்பதைஇறுதிவரைஅவர்ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது.
ராஜன் பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்பவில்லை. அவருக்கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை. தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே.
தத்துவமேதை ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி -யானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன்பதவிவிலகவேண்டும்என்றுபிரதமருக்குஅழுத்தம்கொடுத்தார். நேரு, சாஸ்திரி,
இந்திராகாந்திஆகியமூவரும்ராதாகிருஷ்ணன்ஜனாதிபதியாகஇருந்தபோதுபிரதமர்களாகப்பதவிவகித்தனர். இந்திராகாந்தியின்அரசியலும்ஆட்சிநிர்வாகமும், உயர்ந்தலட்சியங்களில்பிடிப்புள்ளராதாகிருஷ்ணனுக்குஏற்புடையதாகஇல்லை. பொறுப்பில்இருந்துவிலகுவதற்குமுன்புதன்னுடையஇறுதிக்குடியரசுநாள்உரையில்
'நிர்வாகத்திறமையற்றஅரசு’ என்றுவெளிப்படையாகவேவிமர்சித்தார்அந்தத்தத்துவஞானி.
ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள்.
இந்திராகாந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார். நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால்ராதாகிருஷ்ணனைஓர்ஆண்டுகூடஏற்கமுடியவில்லை.
பதவிநாற்காலிக்குப்பெருமைதேடித்தந்ததத்துவஞானியை இரண்டாவதுமுறைஜனாதிபதியாக்கஇந்திராவிரும்பவில்லை.
அவருடைய மருமகள்சோனியாகாந்தி,
இளைஞர்களால்ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும்ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!)
இந்திராகாந்தியால்ஜனாதிபதியானவி.வி.கிரிநன்றிக்கடனாற்றுவதற்காக, விரும்பியேரப்பர்ஸ்டாம்பாகமாறினார்.
ஆனால், அவராலும்ரயில்வேவேலைநிறுத்தத்தைஇந்திராகாந்திகையாண்டவிதத்தைவரவேற்கமுடியவில்லை.
குஜராத்மாநிலஅரசுக்கவிழ்ப்பில்கிரியின்ஆலோசனைபுறக்கணிக்கப்பட்டது. 'ஏழைஎளியமக்களின்எதிர்பார்ப்பைஅரசுநிறைவேற்றத்தவறிவிட்டது’
என்றுஅவர்செய்தவிமர்சனம்இந்திராகாந்தியின்கசப்பைத்தேடிக்கொண்டது.
கிரியைவிடஅழுத்தமானரப்பர்ஸ்டாம்பைஅடுத்துஇந்திராதேடியபோதுபொருத்தமாகக்கண்டெடுக்கப்பட்டவர்தான்பக்ருதீன்அலிஅகமது. இந்திராகாந்திஜனநாயகத்தின்குரல்வளையைநெரித்துநெருக்கடிநிலையைநடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப்பெருக்கவும்தயங்கமாட்டேன்’ என்றுபகிரங்கமாகப்பிரகடனம்செய்தஜெயில்சிங்குக்குஇணையாகயாரேஇருக்கவல்லார்!
அன்றுஇந்திராகாந்தியின்கண்டுபிடிப்புஜெயில்சிங், நேற்றுசோனியாவின்கண்டுபிடிப்பு 'உலகம்சுற்றிய’ பிரதீபாபாட்டீல்.
இந்தியஅரசியலில்இந்திராகுடும்பத்துப்பங்களிப்பைநினைத்தாலேநெஞ்சு 'இனிக்கிறது’!
இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதியாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிரணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்சவேண்டும்? ரப்பர்ஸ்டாம்ப்பதவி,
அலங்காரபொம்மைப்பதவிஎன்றாலும்ஜனாதிபதிபதவிஓரளவுகூர்தாங்கியகத்தி.
அதைக்கொண்டுகொஞ்சமாவதுபயமுறுத்தமுடியும். அனுபவத்தில்சோனியாகாந்திஅதைஅறிவார். இந்திராகாந்தியால்தோற்கடிக்கப்பட்டசஞ்சீவரெட்டி,
ஜனதாஆட்சியின்கருணையால்குடியரசுத்தலைவரானார்.
கட்சிக்குள்நேர்ந்தகுழப்பத்தால்மொரார்ஜிதேசாய்பிரதமர்பொறுப்பில்இருந்துவிலகியதும்,
ஜகஜீவன்ராம்ஆட்சியமைக்கஆதரவுஎம்.பி-க்கள்பட்டியலுடன்ஜனதாகட்சித்தலைவர்சந்திரசேகர்,
சஞ்சீவரெட்டியைச்சந்தித்தபோதுஅவர்ஏற்கமறுத்தார். கோபத்துடன்வெளியேறியசந்திரசேகர்,
ஜனாதிபதிமாளிகையின்வெளியேபத்திரிகையாளர்களிடம்,
ஜனாதிபதிமீதுநம்பிக்கையில்லாத்தீர்மானம்கொண்டுவரவேண்டும்என்றுபொங்கினார். தீட்டியமரத்திலேயேகூர்பார்த்ததுசஞ்சீவரெட்டிகத்தி.
இந்திராகாந்தியின்தீவிரவிசுவாசிஜெயில்சிங்,
ராஜீவ்காந்தியின்ஆட்சியைக்கவிழ்க்கஜனாதிபதிஅதிகாரத்தைப்பயன்படுத்தப்பார்த்தார். ராஜீவ், ஜெயில்சிங்கைஒருபொருட்டாகமதிக்கவில்லை. பிரதமர்நாட்டுநடப்புகளை, நிர்வாகமுடிவுகளைஅவ்வப்போதுஜனாதிபதியைச்சந்தித்துப்பரிமாறிக்கொள்ளும்நடைமுறையைராஜீவ்புறக்கணித்தார்.
'மரபைஉடைக்கலாமா?’
என்றுபத்திரிகையாளர்சந்திப்பில்கேட்டபோது, 'நான்பலமரபுகளைஉடைத்தவன்’ என்றார்ராஜீவ். ஜெயில்சிங்இரண்டுஆண்டுகள்வெளிநாட்டுப்பயணம்மேற்கொள்வதைஅவர்தடுத்தார்.
நேரம்பார்த்துக்காத்திருந்தஜெயில்சிங்குக்கு, போஃபர்ஸ்ஊழல்கைகொடுத்தது. 'ஊழல்மலிந்தநிர்வாகம்’ என்றுகுற்றம்சாட்டி,
ஊழல்தடுப்புச்சட்டத்தின்கீழ்ராஜீவ்அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில்சிங்கின்பழிவாங்கும்புத்திதெளிந்தது. இந்தச்சதிகுறித்துஅவருக்குப்பின்பொறுப்பேற்றஆர்.வெங்கட்ராமன்
‘My Presidential years’ என்றநூலில்விரிவாகப்பதிவுசெய்திருக்கிறார்.
ரப்பர்ஸ்டாம்ப்பதவிக்கும்ஆட்சியாளரைஅச்சுறுத்தும்அதிகாரம்உண்டு.
மென்மையானதண்ணீரில்பாறையைத்தகர்க்கும்வன்மைமறைந்திருக்கிறதுஎன்கிறார்சீனஞானிலயோட்சு. அதைப்போல!