Thursday 19 July, 2012

ஏனோ உறக்கமில்லை எனக்கு...




கருக்கிருட்டு தர்பார் நடத்தும்
அர்த்தஜாம வேளை.
ஏனோ உறக்கமில்லை எனக்கு...

நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகிறேன்
உன் நினைவோடு!

முடிக்கும்முன்பே
விடிந்துவிட்டது பொழுது.
அதனாலென்ன...?

மொட்டைமாடியில்
இன்றும் எண்ணுவேன்
நட்சத்திரங்களோடு  உன்னையும்...!



Thursday 12 July, 2012

வார்த்தையை கண்டுபிடியுங்களேன்!!!

 
இது ஒரு மூன்றெழுத்து வார்த்தை.
கண்டுபிடியுங்களேன் !!!


இதன் -

ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது!
(க_தை)
முதலும், இடையும் முழுச் சொல்லின் சுருக்கம்!
(கவி_)
இடையும், கடையும் விவசாயிக்குத் தேவை!
(_விதை)
முதலெழுத்து முதல் தமிழெண்!
(க_ _)
கடையானது உழவரின் விழாக்காலம்!
(_ _ தை)
அதுதான்...
(க-வி-தை-)
!!!

குறிப்பு:
விடையை சரிபார்க்க இரண்டு வரிகளுக்கு இடைப்பட்ட வெற்றிடத்தை 'செலக்ட்' செய்யவும்...
 
உபரிக்குறிபபு:
இது எனது பள்ளியிறுதியாண்டில் உருப்பெற்றது.