Sunday 26 June, 2011

ஒரு வரலாற்றுப்பதிவு...

சற்றே அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக இப்போதெல்லாம் வலைப்பூ பக்கம் வருவது அரிதாகிவிட்டது. நண்பர்களின் படைப்புகளில் மனதைச் செலுத்தும் நிமிடங்களை இழந்துகொண்டிருக்கிறேன். கிடைத்திருக்கும் குறுகிய கால இடைவெளியில் இதனைப் பதிவிடுகிறேன். எழுத்திற்கு வேலையில்லாத காட்சிப் படிமானங்களின் பதிவு. அந்தநாள் நிகழ்வுகளில் கொஞ்சம் நம்மை நனைத்தெடுக்கும் நினைவு.



























 
















Saturday 4 June, 2011

அன்புள்ள தோழிக்கு...


அன்புள்ள @#$%&க்கு,

கேள்விக்கணைகளைத் தாங்கிய
அம்பராத்தூளியாய்
உன் கடிதம் கிடைத்தது.

திடீரென்று ஒரு வண்ணத்துப்பூச்சி...
ஓடும் ரயில்பெட்டிக்குள் வந்து,
இடம்தேடித் தவித்து ,
மறுபடியும் வெளியேறி,
காற்றோடு கலந்துவிடுவது போன்ற உணர்வு.

ஜென்மஜென்மமாய் தேடியலைந்த ஒன்றை
நான் பார்த்துவிட்டதாகவோ,
எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று
மார்கழியில் மலராக வந்ததாகவோ
நான் உணரவில்லை.

மலர வைத்ததும், நெகிழவைத்ததுமான
வசீகரத் தருணங்களில்
மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்.
ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொன்றையும்
ஒவ்வொன்றாய் கழித்துப் பார்த்தால்
கடைசியில் எஞ்சுவது நீ மட்டும்தான்.

கடலின் அடியாழத்தில் புதைந்த
இசைக்கருவியாய் 
நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும்
விருப்பங்கள் எத்தனை?

இதோ,
ஜன்னலுக்கு வெளியே
இப்போதுதான் மழை விட்டிருக்கிறது.
தலைதுவட்டாத மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில்
இதுவரை பார்த்தேயிராத ஒரு அழகான பறவை....

ஏதோ பேசிக்கொண்டே சிறகுலர்த்துகிறது.
ஹே! இங்கே பாரேன்... - என்று அதை,
உன்னிடம் காட்ட நினைக்கிறது மனது.
நீ என்னோடு இல்லை.

அடுத்தவினாடி ஒளித்துவைத்திருக்கும்
ஆச்சர்யங்களால் நிரம்பியது வாழ்க்கை.
பரிமாறாத பூச்செண்டுகளால் என்ன பயன்?

நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!
நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!
உன் புரிதலுக்குள் தவித்துக்கொண்டிருக்கிறது என் விருப்பம்.

பூக்கும் என்று தெரிந்தால்,
குறிஞ்சிக்காக 12  ஆண்டுகள் அல்ல...
ஆயுள்வரைகூடக் காத்திருக்கலாம்.
நீயும் பூப்பாய்...

காதலை ஏற்றுக்கொள்கிற
ஒவ்வொருபெண்ணும்
தேவதை ஆகிறாளாம்.
நீ தேவதை ஆகப்போகிறாயா? எப்போது?

என் ஐந்து விரல்களும் காத்திருக்கின்றன.
உன் ஐந்து விரல்கள் எப்போது........?

ஆவலுடன் காத்திருக்கிறேன்...,
யரல வழள.