Sunday 26 September, 2010

பிறழ்நிலை குழப்பங்கள்


புலன்களற்று , உணர்வுகளற்று,
எதுவுமே இல்லையென்பதாய்...


ஒரு நீண்ட மௌனமாய்...

விடியலின் வெட்ட வெளியாய்...

ஒரு கவிதைக்காக காத்திருக்கும்
வெள்ளைக் காகிதமாய்...

பின்-
இவை எதுவுமில்லாத பாழ்வெளியாய்...

மாறி மாறிப் பிறழ்கிறது மனது.

பல குழப்பங்களுக்குப் பின் தெளிவாயிற்று...
நீயில்லையென...!




No comments: