
புலன்களற்று , உணர்வுகளற்று,
எதுவுமே இல்லையென்பதாய்...

ஒரு நீண்ட மௌனமாய்...
விடியலின் வெட்ட வெளியாய்...
ஒரு கவிதைக்காக காத்திருக்கும்
வெள்ளைக் காகிதமாய்...
பின்-
இவை எதுவுமில்லாத பாழ்வெளியாய்...
மாறி மாறிப் பிறழ்கிறது மனது.
பல குழப்பங்களுக்குப் பின் தெளிவாயிற்று...
நீயில்லையென...!
No comments:
Post a Comment