Wednesday, 14 July 2010

வெற்றுத் தாளாய்...


நம்பவேயில்லை யாரும் முதலில்...!

அலட்சியம் காட்டியவர்கள் எல்லாம்
புருவம் உயர்த்தி ஆச்சரியம் காட்டினார்கள்.

எப்படி இப்படி என்று சரித்திரம் கேட்டு,
நட்பு விருந்து வைத்தார்கள் நண்பர்கள்.

இவனுக்கேன் இந்த வேலை?
இதையும் கேட்டவர்கள் உண்டு.
பத்திரிக்கையில் (பதிவில்) வெளிவந்த
என் முதல் கவிதைக்கான விளைவுகள்தான் இவை.

இதற்கெல்லாம் காரணமான நீ படித்திருப்பாயா -
அந்த கவிதையை?
வெற்றுத் தாளாய் படபடக்கிறது மனசு.





No comments: