Wednesday 7 July, 2010

எங்கே செல்லும் இந்த பாதை?


ஜூலை 05. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் - எதிர்க் கட்சிகள் அழைப்பு.

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு , எதிர்ப்பு எப்படி என்பதைத் தாண்டி இந்த வே.நி. உண்மையிலேயே மத்திய அரசை மறுபரிசீலனை முடிவுக்கு தள்ளி இருக்குமா என்பதை யோசித்தால் ஒரு பெரிய 'இல்லை' தான் பதில்.

இந்த வே.நி. யால் 10000 கோடி இழப்பு என்று கணக்குகள் சொல்கின்றன. அப்படியா என்று கேட்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது மத்திய மந்திரி சபை.

சரி அந்த அளவுக்கு பேச நமக்கு வெவரம் பத்தாதுப்பா. நம்ம லோக்கலுக்கு வருவோம்.

ஜெயா டிவியில் ஓடாத பேருந்துகள், கலைஞர் தொ.கா.வில் நிரம்பி வழிந்தன. அங்கே திறக்காத கடைகளில் இங்கே வருமானம் கொழித்தது. அங்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த மக்கள், இங்கு இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்த பக்கம் 'வெற்றி' என்று கோப்பை தூக்கியவர்கள், அந்த பக்கம் தலையை தொங்கப்போட்டார்கள். எதை நம்புறதுன்னே தெரியலப்பா!

தேர்தலில் ஓட்டு போடாமலேயே அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் upper middle class எனப்படும் மத்திய ரகத்தினரை சாரி தரத்தினரை இந்த விலை உயர்வு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதே உண்மை. அவர்களைப் பொறுத்தவரை இது ச்சும்மா கொசுக்கடி.

வே.நி.நாளில் அலைபேசி குறுந்தகவலில் வந்த ஒரு செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை வெறும் 23.63 ரூபாய் மட்டும் தானாம்.

ஐயம் கொண்டு இணையத்தில் சில உரலிகளைச் சொடுக்கினேன். கிடைத்த தகவல்கள் தலை சுற்ற வைத்தன. உங்கள் பார்வைக்கு இங்கே அந்த தகவல்.

Basic Price: Rs 24.93
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00
Total price: Rs 54.90

25 ரூபாய் பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி கட்டுபவன் நிச்சயம் E.இந்தியனாகத்தான் இருப்பான். வரியை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுக் கொல்லுமாம் மன்னிக்கவும் கொள்ளுமாம்.

(வடிவேலு வாய்ஸ்-ல் வாசிக்கவும்)
இத எதுத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துமாம். நாமெல்லாம் ஆதரவு கொடுக்கணுமாம். அடுத்த எலக்சன்ல நாம ஓட்டு போட்டு அவங்கள செலக்ட் பண்ணணுமாம். சரி. அவிங்க வந்தாலாவது வரிய கொறச்சு வெலைய மட்டுப்படுத்துவாங்கன்னு பாத்தா, இவிய பங்குக்கு இவியளும் விலைய கூட்டுவாவளாம். இப்போ இருக்க ஆளுங்கட்சி அப்போ எதிர்கட்சியாயி போராட்டம் பண்ணுவாங்களாம். அப்போமும் நாம ஒன்னுஞ் சொல்லாம விரல் சூப்பிக்கிட்டே வீட்டுக்குள்ள இருப்பமாம். என்னத்தச் சொல்ல?

இப்போ கேப்டன் வாய்ஸ்-ல...
அரசாங்கம்ன்றது வானத்துல இர்ர்ந்து குதிச்சது இல்ல. மக்களால் மக்களுக்காக நடத்தப்படுரதுதான் அரசாங்கம். (அஆவ்...இப்பவே கண்ணை கட்டுதே)

இப்போ உங்க வாய்ஸ்-லயே கண்டினியு பண்ணுங்க.

இப்படியே யோசித்துக் கொண்டு போனால்... இலக்கில்லாமல் போகலாம். அதனால் இப்போதைக்கு இதற்கு ஒரு 144. ஆனா அட்லீஸ்ட் உங்க மைன்ட் வாய்ஸ்-ல கொஞ்சம் யோசிங்கண்ணா.

வெற்றி - தோல்வி, ஆதரவு - எதிர்ப்பு என்பதை விட்டு விட்டு, இந்த பந்த்-ஆல் யாருக்கு இம்மீடியேட் லாபம் என்று சிந்தித்தால், பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்களுக்கு என்று தோன்றுகிறது. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், சாலைகளை இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவ்வளவு வாகனங்களும் எவ்வளவு பெட்ரோல் சாப்பிட்டிருக்கும். யோசித்துப் பார்த்தால்.. ஷாக் அடிக்குது சோனா..

இப்படி யோசிச்சுகிட்டே இருந்தா...
இப்படி வெலை கூடிகிட்ட இருந்தா...
இப்படி நாம பொலம்பிகிட்டே இருந்தா..

எங்கே செல்லும் இந்த பாதை?
(அப்பாடி டைட்டில் போட்டாச்சு)





No comments: