
உனது அடக்கமான அழகா,
அழகான அடக்கமா
எது என்னை இன்றும்
எழுத வைப்பது?
நீ மாற மாட்டாயா?
நாள்காட்டியில்
நீ தேதி பார்ப்பதில்லையா?
நகர்ந்து விட்ட நாட்கள்
பேசிக்கொள்ளாத வருடங்களாய்
நீண்டு விட்டதில்
உனக்கு உடன்பாடுதானா?
பெண்ணின் சிறு தவறுகளை மன்னிக்காத ஆணும்,
ஆணின் அன்பை புரிந்த கொள்ளாத பெண்ணுமாய்
நாம் ஆகிவிட்டோமா?
ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து
நாம் வளரவில்லையா?
ஒவ்வொரு காதலும் தவறுகளின் தொடக்கமா?
அறிவின் வீதிகளில் ஆதரவின்றி அலைந்தேன்,
தென்றலாய் நீ தோள் தொட்டாய்!
அன்பின் முகவரி எது என்று கேட்டேன்
நீ சிரித்தாய்,நான் கண்டுகொண்டேன்!
வா நமது உலகம் காத்திருக்கிறது,
கேள்விகளால்
நம்மை இனி கட்டிப்போட
அறிவுக்கு அனுமதி கிடையாது.
அன்பின் உலகில்
நாம் மறுபடியும் குழந்தைகள்!
No comments:
Post a Comment