
இந்த இரவையும்
உன் நினைவுகள் விழுங்கி விட்டன.
புத்தகம் திறந்தபோது
என்னை வாசிக்கிறது உனது கண்கள்.
வெளியில் ஓடினேன்
வழியெங்கும் உன் கொலுசு மணிகள்.
பெயர் தெரியாத விண்மீன்கள்
உன் பெயரைச் சொல்லி கண்சிமிட்டுகின்றன;
நான் என்ன செய்தேன்?
பேராசை, பெருங்கனவு
பெண்களுக்கு மட்டும்தானா?
காதல் சதுரங்கத்திலும்
ராஜாக்கள் ஒரு கட்டந்தான்
நகர முடியுமா?
என் மனதிற்கு கதவு கிடையாது;
நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?
பகைவனுக்கருள்வாய் என்றான் பாரதி.
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு இம்சைகள் செய்கிறாய்.
உனது பகைவன் பாவம்!
No comments:
Post a Comment